கடந்த ஜூன் 2ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 592.9 கோடி டாலர்கள் உயர்ந்து, 59506.7 டாலர்களாக உள்ளது. இதன் மூலம், முந்தைய வாரத்தில் சரிவை சந்தித்த அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவர தரவுகள் இதனை உறுதி செய்துள்ளன.
இந்தியாவின் வெளிநாட்டு நாணய சொத்து மதிப்பு 527 கோடி டாலர் உயர்ந்து, 52620.1 டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நாட்டின் மொத்த தங்கம் கையிருப்பு 65.5 கோடி டாலர்கள் உயர்ந்து, 4555.7 கோடி டாலர்களாக பதிவாகி உள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியத்தால் உருவாக்கப்படும் கையிருப்பு சொத்து ( எஸ் டி ஆர் ), 60 லட்சம் டாலர்கள் குறைந்து, 1818.6 கோடி டாலர்களாக பதிவாகி உள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு 1 கோடி டாலர்கள் உயர்ந்து 512.3 கோடி டாலர்களாக உள்ளது.