இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு, 561.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராந்திர புள்ளியல் தரவுகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து 4 வாரங்களாக, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு உயர்ந்து வருகிறது. நவம்பர் 18 ஆம் தேதி, 547.25 பில்லியன் டாலர்களாகவும், நவம்பர் 25 ஆம் தேதி, 550.14 பில்லியன் டாலர்களாகவும் இருப்பு பதிவானது. இது, மேலும் உயர்ந்து, டிசம்பர் 2 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 561.2 பில்லியன் டாலர்களாக பதிவாகி உள்ளது. நவம்பர் 25 ஆம் தேதி தரவுகள் படி, அந்நிய நாணயங்கள் மதிப்பு, 3 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, 487.29 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், இந்தியாவின் தங்க இருப்பு 73 மில்லியன் டாலர்கள் குறைந்து, 39.94 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.