பிரான்ஸ் பயணம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு UPI பணப்பரிமாற்றம் சேவையை இனி பிரான்சில் பயன்படுத்தலாம் என ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டிற்கு 2 நாட்கள் அரச முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு வாழும் இந்தியர்களிடம் உரையாடினார். அதில் இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி மிக விரைவிலேயே ஈபிள் கோபுரத்தில் இருந்து UPI பயன்படுத்தி ரூபாயில் பணம் செலுத்த முடியும் என்று தெரிவித்தார். இதனால் சுற்றுலா செல்லும் பயணிகள் UPI பயன்படுத்தி கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். கையில் பணத்துடன் செல்ல தேவை இல்லை.
கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் UPI முறையை அறிமுகப்படுத்திய என் சி பி ஐ பிரான்ஸ் நாட்டின் வேகமான மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் பேமெண்ட் முறையான லைரா உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதேபோல் இந்த வருடம் சிங்கப்பூர் PAYNOW என்ற பரிவர்த்தனை மூலம் நாடு கடந்த பரிவர்த்தனைக்கு அனுமதி அளிப்பது குறித்து ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் ஐக்கிய அமீரகம் பூடான் நேபாளம் நாடுகளும் UPI முறையை ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டது.