நடப்பாண்டில், இந்தியாவின் 2வது யூனிகார்ன் நிறுவனமாக இன்கிரெட் பைனான்ஸ் இடம் பிடித்து வரலாறு படைத்துள்ளது.
இன்கிரெட் பைனான்ஸ் நிறுவனம், 60 மில்லியன் டாலர்கள் மதிப்பில் நிதி திரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டது. அதைத்தொடர்ந்து, நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1.04 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. அதன்படி, 2023ம் ஆண்டில், ஜெப்ட்டோ நிறுவனத்தை தொடர்ந்து, இந்தியாவின் 2வது யூனிகார்ன் நிறுவனமாக இன்கிரெட் பைனான்ஸ் வரலாறு படைத்துள்ளது. இன்கிரெட் நிறுவனத்தின் நிதி திரட்டலில் பல்வேறு நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. திரட்டப்பட்ட நிதி, கடன் வழங்கல் சார்ந்த பணிகளுக்கு முதன்மையாக செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.