ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்கள் இந்திய அரசுக்கு பகிரப்பட்டுள்ளன.ஸ்விஸ் வங்கி, 5 வது முறையாக, இந்திய அரசுக்கு விவரங்களை பகிர்ந்து உள்ளது. அதில், ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மட்டுமின்றி, தனிநபர் விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. கணக்கு வைத்திருக்கும் நபரின் பெயர், முகவரி, வருமான கணக்கு எண், மூலதன வருவாய் போன்ற பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்வதன் மூலம், வரி ஏய்ப்பு, கருப்பு பண பரிமாற்றம், தீவிரவாத இயக்கத்திற்கு தவறான வழியில் பணம் கொடுக்கப்படுவது போன்றவற்றை அறிய முடியும். அந்த பணியில் இந்திய அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதன் முக்கியத்துவம் கருதி, ஸ்விஸ் வங்கி அளித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.