டிஜிட்டல் மயம் என வரும்போது இந்தியாவிடம் இருந்து ஜெர்மனி நிறைய கற்று கொள்ள வேண்டும் என அந்நாட்டு தூதர் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே ரூ.8,480 கோடி மதிப்பிலான வலுவான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இடையே, இந்த திட்டங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என ஜெர்மனி தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெர்மனி தூதரான டாக்டர் பிலிப் ஆக்கர்மேன், டிஜிட்டல் மயம் பற்றி கூறுவதென்றால், நாம் (ஜெர்மனி) இந்தியாவிடம் இருந்து நிறைய கற்று கொள்ள முடியும். நாடு முழுவதும் டிஜிட்டல் மயம் இழைந்தோடி இருக்கும் விதம் கண்டு ஆச்சரியமடைந்து போயுள்ளேன். தங்களது வாழ்க்கையில் மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் விதம் என்று எடுத்து கொண்டால், நாம் (ஜெர்மனி) இன்னும் பிற்பட்டு இருக்கிறோம் என்று கூறினார்.