கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், கச்சா சோயா எண்ணெய் மற்றும் தங்கம் ஆகியவற்றின் அடிப்படை இறக்குமதி விலையை இந்தியா குறைத்துள்ளது.
உலக அளவில் சமையல் எண்ணெய் மற்றும் வெள்ளியை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. அத்துடன் தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நாடாகவும் இந்தியா உள்ளது. ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் சமையல் எண்ணெய்கள், தங்கம் மற்றும் வெள்ளிக்கான அடிப்படை இறக்குமதி விலைகளை அரசாங்கம் திருத்துகிறது. அதை வைத்து இறக்குமதியாளருக்கு செலுத்த வேண்டிய வரித் தொகை கணக்கிடப்படுகிறது. தற்போது உலக சந்தையில் மேற்குறிப்பிட்ட பொ௫ட்களின் மதிப்பு மேம்பட்டுள்ளதால் அவற்றின் அடிப்படை இறக்குமதி விலையை இந்தியா குறைத்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
அதன்படி, கச்சா பாமாயிலின் அடிப்படை விலையை டன்னுக்கு 996 டாலரில் இருந்து 937 டாலராக குறைந்துள்ளது. இதனுடன், RBD பாமாயில் விலை டன் ஒன்றுக்கு 1019 டாலரில் இருந்து 982 டாலராகவும், RBD பாமோலின் விலை டன் ஒன்றுக்கு 1035 டாலரில் இருந்து 998 டாலராகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கச்சா சோயாபீன் அடிப்படை விலை டன் ஒன்றுக்கு 1362 டாலரில் இருந்து 1257 டாலராகவும் மாற்றப்பட்டுள்ளது. தங்கம் வெள்ளியின் அடிப்படை விலை 10 கிராமுக்கு 549 அமெரிக்க டாலரில் இருந்து 10 கிராமுக்கு 553 டாலராகவும், வெள்ளியின் அடிப்படை விலை கிலோவுக்கு 635 டாலரில் இருந்து 608 டாலராக தி௫த்தப்பட்டுள்ளது. இந்த வரி மதிப்பு குறைப்பானது அடிப்படை இறக்குமதி விலையில் செலுத்த வேண்டிய சுங்க வரியை குறைப்பதால், உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறையலாம் என்று வரி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், கச்சா சோயா எண்ணெய் மற்றும் தங்கத்தின் அடிப்படை இறக்குமதி விலைகள் குறைவதால், உள்நாட்டு சந்தையில் அவற்றின் மதிப்பும் குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் ௯றியுள்ளனர். மறுபுறம் இந்த அடிப்படை விலை குறைவினால், பணவீக்கத்தில் இருந்து சாமானிய மக்கள் சிறிது நிவாரணம் பெற முடியும் என்பது கவனிக்கத்தக்கது.