இந்தியாவின் நீர் மின் உற்பத்தியில் 16.3% வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 38 ஆண்டுகளில் பதிவான குறைவான நீர் மின் உற்பத்தி இதுவாகும். முறையான பருவமழை இல்லாத காரணத்தினால், நீர் மின் உற்பத்தியை குறைத்து அனல் மின் உற்பத்திக்கு மாறியதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் புத்தாக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சூரிய மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் வெறும் 8.3% மட்டுமே நீர்மின் உற்பத்தியாக பதிவாகியுள்ளது. இது வரலாற்று வீழ்ச்சி என கூறப்படுகிறது. அத்துடன், கடந்த 2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த புத்தாக்க எரிசக்தி பயன்பாடு ஐந்தாண்டு கால வீழ்ச்சியாக உள்ளதாக கூறப்படுகிறது