சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டியூபுகள் மற்றும் பைப்புகளுக்கு, இந்தியா, குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பயனடையவர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில், அதிகப்படியான இறக்குமதியால், உள்நாட்டு உற்பத்தி துறை வெகுவாகப் பாதிப்படைகிறது. அதைத் தடுக்க, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படுகிறது. உள்நாட்டு சந்தை விலையை விட குறைந்த விலையில் வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதி ஆவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிப்படைவர். அதனை தடுக்க இந்த வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.