உலகமே மின்சார வாகனங்கள் பயன்பாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த சூழலில், மின்சார வாகனங்களுக்கு தேவையான கோபால்ட் உள்ளிட்ட தாதுக்கள் ஆழ்கடலில் உள்ளது. எனவே, அதைப்பற்றி ஆராய்வதற்கு இந்தியா முயற்சி செய்து வருகிறது. சீனாவுக்கு போட்டியாக தாது பொருட்களை கண்டறிவதில் இந்தியா முனைப்பு காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா சபையின் சர்வதேச கடற்பரப்பு ஆணையத்திடம் இந்திய விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, இந்திய பெருங்கடலின் எதிர் எதிர் முனைகளில் உள்ள சால்ஸ்பர்க் ரிட்ச் மற்றும் அஃபனஸி நிக்கிட்டின் சீமவுண்ட் பகுதிகளை ஆராய்வதற்கான உரிமம் கோரப்பட்டுள்ளது. சீனாவும் இதே பகுதிகளை ஆராய முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதிகளில் கோபால்ட் மற்றும் மாங்கனிஸ் உள்ளதாக கூறப்படுகிறது. மின்சார வாகனங்கள் மற்றும் சூரிய மின் உற்பத்தி ஆகியவற்றுக்கு தேவைப்படும் பேட்டரிகளில் இந்த தாதுக்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், இந்தியா ஆழ்கடல் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முனைப்பு காட்டுகிறது.