அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், தினசரி வெளியுறவுத் துறை செய்தி மாநாட்டை நடத்திய முதல் இந்திய-அமெரிக்கர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
குஜராத்தில் பிறந்த த படேல், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். முன்பு வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பிடனின் உதவி செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார். தற்போது
வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் விடுமுறையில் இருப்பதால், வேதாந்த் படேல், வெளியுறவுக் கொள்கைப் பிரச்சினைகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக வெளியுறவுத் துறையின் மாநாட்டில் கலந்துரையாடினார். அதில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு, JCPOA தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் லிஸ் ட்ரஸ் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரதம மந்திரி ஆனது போன்ற விவகாரங்கள் அடங்கும். வேதாந்த் , உலக அரங்கில் அமெரிக்காவின் தனித்துவத்தை தெளிவான தகவல்தொடர்புடன் எடுத்துரைத்தார் என ஹில் கூறினார். முன்னதாக, காங்கிரஸ் பெண் பிரமிளா ஜெயபாலிடம் தகவல் தொடர்பு இயக்குனராகவும், காங்கிரஸ் உறுப்பினர் மைக் ஹோண்டாவிடம் தகவல் தொடர்பு இயக்குநராகவும் படேல் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.