மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம். வி. ரூன் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடந்த 14ஆம் தேதி கடத்தினார்கள்.
அரபிக்கடல் பகுதியில் மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம். வி. ரூன் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினார்கள். அதில் 18 ஊழியர்கள் இருந்தனர். அதில் பயணம் செய்த மாலுமிக்கு உடல் சரியில்லாமல் போனதை அடுத்து அவருக்கு உதவி செய்வதற்காக இந்திய கடற்படை கப்பல் உதவி கோரப்பட்டு இருந்தது. அப்போது இந்திய கடற்படை விமானம் அரபிக்கடல் பகுதியில் ரோந்து ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா நாட்டுக்கு செல்வது தெரியவந்தது. அதனை எடுத்து இந்திய போர் கப்பலான ஐஎன்எஸ் கொல்கத்தா அந்த பகுதிக்கு சென்று கடத்தப்பட்ட கப்பலை இடைமறித்தது. மேலும் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மாலுமியை விடுவித்து அவருக்கு உதவி வழங்கப்பட்டது. தற்போது இந்தியா கடற்கொள்ளையர்களை தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.