இந்தியா மற்றும் மலேசியா நாடுகளின் கூட்டு ராணுவ ஒத்திகை மலேசியாவின் Kluang பகுதியில் திங்கட்கிழமை தொடங்கியுள்ளது. வரும் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஒத்திகைக்கு, ஹரிமா சக்தி 2022 (Harimau Shakti 2022) என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த 2012 முதல், இருநாட்டு ராணுவங்களுக்கிடையில் வருடாந்திர ஒத்திகை பயிற்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம், இந்திய ராணுவத்தின் Garhwal Rifles Regiment (கர்வால் ரைஃபில் ரெஜிமெண்ட்) மற்றும் மலேசிய ராணுவத்தின் Royal Malay Regiment (ராயல் மலாய் ரெஜிமெண்ட்) ஆகியவை ராணுவ ஒத்திகையில் ஈடுபடுகின்றன. இந்த பயிற்சி ஒத்திகை மூலம் இரு நாடுகளின் நாட்டு ராணுவங்களின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது.