இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

April 17, 2023

இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று, இந்திய பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை, சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 520.25 புள்ளிகள் சரிந்து, 59910.75 ஆக பதிவாகியுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 121.15 புள்ளிகள் சரிந்து, 17706.85 ஆக நிலை பெற்றது. மேலும், இன்றைய […]

இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று, இந்திய பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை, சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 520.25 புள்ளிகள் சரிந்து, 59910.75 ஆக பதிவாகியுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 121.15 புள்ளிகள் சரிந்து, 17706.85 ஆக நிலை பெற்றது. மேலும், இன்றைய வர்த்தக நாளின் இடையில், 800 புள்ளிகள் வரை பங்குச்சந்தை சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், முந்தைய வாரத்தில் கடும் சரிவை எதிர்கொண்ட வங்கித்துறை, தற்போது மீண்டுள்ளது. அதே வேளையில், தகவல் தொழில்நுட்பத்துறை சரிவை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, நெஸ்லே, பவர் கிரிட், பாரத ஸ்டேட் வங்கி, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஏற்றத்தை பதிவு செய்துள்ளன. அதே வேளையில், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச் சி எல் டெக், எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக, இன்போசிஸ் நிறுவனம் தனது ஒரு வருட குறைவான பங்கு மதிப்பை பதிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu