இந்தியாவின் மின்சார வாகனச் சந்தையில், வரும் 2024 ஆம் ஆண்டில் கால் பதிக்க உள்ளதாக, ஸ்கோடா வாகன நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் எஸ்யூவி ரக மின்சார வாகனமாக Enyaq iV களமிறங்க உள்ளது. நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த அறிவிப்பை நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி பீட்டர் சாலக் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டில், இந்திய சந்தையில் மட்டுமே நிறுவனத்தின் விற்பனையில் வரலாற்று உச்ச வளர்ச்சி பதிவானதாக கூறினார். அத்துடன், தொடர்ந்து இந்திய சந்தையில் விற்பனையை அதிகரிக்கும் உத்திகளை நிறுவனம் கையாண்டு வருவதாக கூறினார்.
மின்சார கார் அறிமுகம் குறித்த அறிவிப்புடன் சேர்த்து, கோடியாக், குஷாக், ஸ்லேவியா மாடல் கார்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும், செமி கண்டக்டர் பற்றாக்குறை உள்ளிட்ட பல சவால்கள் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் விற்பனை குறைந்துள்ளதாக ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது.