இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தால் ரஷ்யாவுக்கு பலன் ஏற்படும் என அதிபர் புதின் தெரிவித்தார்.
டெல்லியில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் இந்தியா, கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான கப்பல் மற்றும் ரயில் இணைப்புக்கான ஒரு வழித்தடம் தொடங்கப்படும் என்று ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இதனை அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டாக அறிவித்தன. இந்த திட்டம் இந்தியா, சவுதி அரேபியா, பிரான்ஸ், இத்தாலி, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு ஒத்துழைப்புக்கான சிறந்த திட்டமாகும்.
இந்நிலையில் இதுகுறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது, புதிய பொருளாதாரம் வழித்தடம் உருவாக்கத்திற்கான ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா, யூனியன் மற்றும் இந்தியாவுடன் அமெரிக்காவும் இணைந்துள்ளது. இதில் இதனால் அமெரிக்காவுக்கு பலன் கிடைக்கும் என்று நான் எண்ணவில்லை. எங்களுடைய வடக்கு தெற்கு திட்டத்துடன் கூடுதலாக இந்த வழித்தடம் சரக்கு போக்குவரத்துக்கு உதவும் என்றார். இதில் எங்களுக்கு எந்த தடையும் ஏற்படப் போவதில்லை. இந்த திட்டம் மூலம் ரஷ்யாவுக்கே பலன் அதிகம். இந்த திட்டம் ரஷ்யாவின் தளவாடப் போக்குவரத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்று தெரிவித்தார்.