உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
உலகில் பத்து நாடுகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதற்கு அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதில் இரண்டு அணிகளுமே தனது முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. அடுத்து ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது இந்தியாவா பாகிஸ்தானா என்னும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுவரை உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றதில்லை. ஏழு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாளை ஆட்டத்தில் நம்பிக்கையுடன் இந்திய அணி விளையாட உள்ளது. போட்டிக்காக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டேடியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.