இந்திய கொடியுடன் வரும் கப்பல்களுக்கும் பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானிலிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் வரும் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய கொடியுடன் வரும் கப்பல்களுக்கும் பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் பொருளாதார பாதுகாப்பிற்கும் தேசிய நலன்களுக்காகவே எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.