இந்தியா உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்றுக்கு தேர்வு

November 16, 2023

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி சுற்று நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி இடையே நடைபெற்றது. இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரை இறுதி சுற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டத்தில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 47 ரன்களை எடுத்து அவுட் ஆனார். கில் […]

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி சுற்று நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி இடையே நடைபெற்றது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரை இறுதி சுற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டத்தில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 47 ரன்களை எடுத்து அவுட் ஆனார். கில் 79 ரன்களை குவித்த நிலையில் காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு வெளியேறினார். பின்னர் விளையாடிய விராத் கோலி தனது 50 வது சதத்தை அடித்து சாதனை படைத்தார். பின்னர் தனது 117 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ஸ்ரேயாஸ் செய்ய மற்றும் கே.எல் ராகுல் இருவரும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது.இதனை அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களாக கான்வாய் மற்றும் ரவீந்திரா ஆகியோர் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் வில்லியம்சன் மற்றும் மிச்சல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் வில்லியம்சன் அரை சதம் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய மிக்செல் சதம் அடித்து 134 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனை அடுத்து 48.5 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்தியா அபார வெற்றி போட்டி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா இத்துடன் நான்காவது முறையாக உலக கோப்பை இறுதி தொடரில் போட்டியிட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu