மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் ஒன்றை இந்தியா வடிவமைத்துள்ளது. இதற்கு புஷ்பக் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டின் நேரடி செயல்பாடுகள் குறித்த காணொளி வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு சென்றிருந்த போது, புஷ்பக் ராக்கெட் சோதனையை நேரில் பார்வையிட்டார்.
மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு முறை ராக்கெட் ஏவப்படுவதற்கு ஆகும் செலவுகளில் 80% குறையும். எனவே, இது இந்தியாவின் எதிர்கால விண்வெளி சாதனைகளில் முக்கிய பங்கு வகிக்கும். இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட்டின் முக்கிய தரையிறங்கும் சோதனை கடந்த ஏப்ரல் 2ம் தேதி நடைபெற்றது. அதில் கிடைத்த வெற்றி, புஷ்பக் ராக்கெட்டின் மிகப்பெரிய சாதனையாக சொல்லப்பட்டுள்ளது.