உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மிகப்பெரிய பங்கு வகிப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 16% அளவில் இந்தியாவின் பங்களிப்பு உள்ளதாக நாணய நிதியம் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“சர்வதேச அளவில் பல்வேறு பொருளாதார சவால்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்தியா நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி பாராட்டுக்குரியது” - இவ்வாறு சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு, போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றத்தை பதிவு செய்து வருவதால் பொருளாதார வளர்ச்சி நிலை தன்மையோடு இருப்பதாக நாணய நிதியம் கூறியுள்ளது. அத்துடன், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.