கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வந்த இந்திய பங்குச்சந்தை, இந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று சரிவுடன் நிறைவு அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 505.19 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 165.5 புள்ளிகளை இழந்துள்ளது. இறுதியாக, சென்செக்ஸ் 65280.45 புள்ளிகள் ஆகவும், நிஃப்டி 19331.8 புள்ளிகள் ஆகவும் உள்ளன.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, டாடா மோட்டார்ஸ், டைட்டன், மஹிந்திரா, எஸ் பி ஐ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ஏற்றத்தையும், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், இண்டஸ் இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல் ஆகிய நிறுவனங்கள் சரிவையும் பதிவு செய்துள்ளன.