இந்தியா-இலங்கை கப்பல் சேவை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தம்!

February 12, 2025

புதிய சேவை தொடங்கும்போது தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக இந்தியா-இலங்கை கப்பல் சேவை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 14-ந்தேதி "செரியாபாணி" என்ற பெயரில் புதிய பயணிகள் கப்பல் சேவை துவங்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பிற காரணங்களால் அதே மாதம் 23-ந்தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், "சுபம்" கப்பல் நிறுவனம் நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் […]

புதிய சேவை தொடங்கும்போது தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக இந்தியா-இலங்கை கப்பல் சேவை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 14-ந்தேதி "செரியாபாணி" என்ற பெயரில் புதிய பயணிகள் கப்பல் சேவை துவங்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பிற காரணங்களால் அதே மாதம் 23-ந்தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், "சுபம்" கப்பல் நிறுவனம் நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு "சிவகங்கை" என்ற பெயரில் புதிய கப்பல் சேவையை தொடங்க முடிவு செய்தது. 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ந்தேதி முதல் அந்த கப்பல் தனது சேவையை ஆரம்பித்தது.

இந்த கப்பல் வாரத்திற்கு 5 நாட்கள் இயக்கப்படுவதாக இருந்தது, ஆனால் வடகிழக்கு பருவமழை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்போது, இந்த ஆண்டு (2025) புதன்கிழமை முதல் கப்பல் சேவை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு, வாரத்திற்கு செவ்வாய்க்கிழமை தவிர்ந்த 6 நாட்கள் பயணிகள் கப்பல் சேவையை பயன்படுத்த முடியும் என கூறப்பட்டது. இந்த நிலையில், தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, இன்று கப்பல் சேவை துவங்கவிருந்த தேதி மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், வருகிற 15-ந்தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu