உலகின் அதிகப்படியான பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடுகளில் ஒன்றான இந்தியா, 2070 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய மதிப்பை அடையும் இலக்கை கொண்டுள்ளது.
இது குறித்து சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ன் தலைவர் எஸ்.எம். வைத்யா, பங்குதாரர்களின் வருடாந்திர கூட்டத்தில் ௯றியதாவது, ' நிறுவனமானது 2046 ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியீட்டின் நிகர மதிப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. அத்துடன் உலகின் அதிகமாக பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடுகளில் ஒன்றான இந்தியா, 2070 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தின் நிகர மதிப்பில் பூஜ்ஜிய நிலையை அடையும் இலக்கை கொண்டுள்ளது என ௯றினார். இதற்காக இந்தியன் ஆயில் நிறுவனமானது (IOC) கச்சா சுத்திகரிப்பு ( ஸ்கோப்1)மற்றும் ஆற்றல் நுகர்வு (ஸ்கோப்2) ஆகியவற்றால் ஏற்படும் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக ஸ்கோப் 1 மற்றும் 2 ன் செயல்பாடுகள் குறித்து ஒ௫ வரைபடத்தை தயாரித்துள்ளதாக கூறினார்.