இந்தியாவில் பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள உப்பு பாலை வனப் பகுதியில், உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்த பணியில் களமிறங்கியுள்ளது.
குஜராத்தில் உள்ள ரன் ஆஃப் கட்ச் பகுதி உப்பு பாலைவனம் என அறியப்படுகிறது. இந்த பாலைவனத்தில் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியிலிருந்து பார்த்தால் கூட தெரியும் வகையில், மிகப்பெரிய கட்டமைப்பாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தில், மத்திய அரசுடன் இணைந்து அதானி குழுமம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 726 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த கட்டமைப்பு, 2.6 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. கிட்டத்தட்ட 1.8 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வகையில், இங்கிருந்து புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் கிடைக்கும் என கூறப்படுகிறது.