இந்தியா – இங்கிலாந்து இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பரஸ்பர நன்மை பயக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்தாகியுள்ளது. இரு நாட்டு பிரதமர்கள் மோடி மற்றும் கெயர் ஸ்டார்மர் தொலைபேசி வழியாக உரையாடியதையடுத்து, இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் ஸ்டார்மருடன் உரையாடியதில் மகிழ்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பு, புதுமை ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. அவரை விரைவில் இந்தியாவில் வரவேற்பதில் ஆவலுடன் உள்ளேன்” எனக் கூறினார்.
இந்த ஒப்பந்தம், இந்தியா-இங்கிலாந்து இடையிலான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் பெரும் முன்னேற்றமாக கருதப்படுகிறது.