20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர அனுமதி வழங்கியுள்ளது.
2007-ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இணைந்து இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். ஆனால் இந்த ஒப்பந்தம் அதன்பிறகு நடைமுறைக்குவரவில்லை.
20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர அனுமதி வழங்கியுள்ளது. ஹோல்டெக் என்ற அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் அணு உலைகள் அமைக்க டிரம்ப் அரசின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா சில நிபந்தனைகள் விதித்துள்ளது. அதன்படி, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் இணைந்து உருவாக்கப்படும் அணு மின் நிலையங்கள், அமெரிக்க அரசின் அனுமதி இல்லாமல் இந்தியாவில் அல்லது வேறு எந்த நாடுகளுக்கும் அல்லது அமெரிக்க நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்துக்கோ மாற்றப்படக்கூடாது.