உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே நேற்று நடைபெற்றது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இடையேயான 37 ஆவது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் முறையே 40 மற்றும் 23 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் முறையே 77 மற்றும் 8 ரன்கள் எடுத்து பவுலியன் திரும்பினர். பின்னர் சூர்யா யாதவ் மற்றும் விராட் கோலி களமிறங்கினார். இதில் கோலி 120 பந்தில் 101 ரன்கள் குவித்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் இந்தியா ஐந்து விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 327 ரன்கள் என்னும் இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களம் இறங்கியது. ஆரம்பம் முதல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சொற்ப இலக்கங்களில் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து 27.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தென் ஆப்பிரிக்கா அணி 83 ரன்களில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.