டேவிஸ்கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப்-1 ப்ளே ஆப் சுற்று போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்திய டென்னிஸ் அணி 60 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் விளையாட சென்றுள்ளது. இதற்கு முன்னதாக 1964 இல் பாகிஸ்தான் சென்ற இந்திய டென்னிஸ் அணி அப்போது 4- 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இலையில் நேற்று முன்தினம் குரூப்-1 பிளே ஆப் சுற்று போட்டியில் இரண்டு ஒற்றையர் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதுபோன்று இரட்டையர் ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் குரூப்-1 பிளே ஆப் சுற்றில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது