லக்னோவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் லக்னோவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இடையே போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றும் இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் வீரர்கள் நிதானத்துடன் நல்ல தொடக்கம் அமைத்தனர். ஆனால் ஐந்து ஓவர் முடிவில் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டம் இழந்து தவித்தனர். 40 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து விட்டது. இதனால் இங்கிலாந்து ரன்கள் எடுப்பதற்கு மிகவும் தடுமாறியது. அதன் பின்னால் வந்த வீரர்களும் அடுத்தடுத்து பவிலியன் திரும்பினர். இறுதியில் 34.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து எடுத்தது. இறுதியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது.