இந்திய விமானப்படையில் நவீன போர் விமானங்கள் அதிகம் தேவை என விமானப்படை தளபதி வி.ஆர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் விமானப்படை தளபதி ஜெனரல் ஸ்டீபன் மிலே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் டெல்லியில், இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரியை நேற்று சந்திந்து இருதரப்பு ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து சவுத்ரி அளித்த பேட்டியில், பிரான்ஸ் விமானப்படையிலும் ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன. நாமும் ரஃபேல் போர் விமானத்தை பயன்படுத்துகிறோம்.
மேலும், நமது விமானப்படையில் 4.5 தலைமுறையைச் சேர்ந்த நவீன போர் விமானங்களை சேர்ப்பது மிக முக்கியம். விமானப்படையின் உடனடித் தேவைகளை சந்திக்க இந்த வகை விமானங்களின் 5 அல்லது 6 படைப்பிரிவுகள் தேவை என்று அவர் கூறினார்.