சீன எல்லையில் கணிக்க முடியாத சூழல் நிலவுவதாக இந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பேசுகையில், லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. அதோடு அந்த நாடு எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருகிறது. எனவே எல்லையில் கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இந்திய தரப்பில் லடாக் எல்லைப் பகுதிகளில் புதிதாக விமான தளம், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சீன வீரர்களுக்கு இணையாக எல்லையில் இந்திய வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.