எதிரிகளின் ட்ரோன்களை அழிக்க பருந்துகளை பயன்படுத்தும் இந்திய ராணுவம்

November 30, 2022

இந்திய ராணுவம் எதிரிகளின் ட்ரோன்களை அழிக்க பருந்துகளை பயன்படுத்தி வருகிறது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், இந்திய ராணுவம் தனது நடவடிக்கைகளுக்கு மோப்ப நாய்களுடன் பயிற்றுவிக்கப்பட்ட பருந்துகளையும் பயன்படுத்தி வருகிறது. பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிகளுக்கு வரும் ட்ரோன்களின் அச்சுறுத்தலை சமாளிக்க பாதுகாப்புப் படையினருக்கு இது உதவியாக உள்ளது என்றனர். உத்தராகண்ட் மாநிலம் அவுலியில் இந்தியா – அமெரிக்கா இடையிலான 18-வது கூட்டு ராணுவப் பயிற்சி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதில் பருந்துகளை […]

இந்திய ராணுவம் எதிரிகளின் ட்ரோன்களை அழிக்க பருந்துகளை பயன்படுத்தி வருகிறது.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், இந்திய ராணுவம் தனது நடவடிக்கைகளுக்கு மோப்ப நாய்களுடன் பயிற்றுவிக்கப்பட்ட பருந்துகளையும் பயன்படுத்தி வருகிறது. பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிகளுக்கு வரும் ட்ரோன்களின் அச்சுறுத்தலை சமாளிக்க பாதுகாப்புப் படையினருக்கு இது உதவியாக உள்ளது என்றனர்.

உத்தராகண்ட் மாநிலம் அவுலியில் இந்தியா – அமெரிக்கா இடையிலான 18-வது கூட்டு ராணுவப் பயிற்சி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதில் பருந்துகளை பயன்படுத்தி எதிரிகளின் ட்ரோன்களை வீழ்த்துவது எப்படி என்பது குறித்த செயல் விளக்கத்தை இந்திய ராணுவம் அளித்தது. இத்தகைய நோக்கத்துக்கு இந்தப் பறவையை பயன்படுத்துவது இதுவே முதல்முறை என்று ராணுவ அதிகாரிகள் கூறினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu