இந்தியாவின் ஒரு விண்வெளி வீரர் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நாசா-இஸ்ரோ ஒத்துழைப்பின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்வார் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். குரூப் கேப்டன்களான சுபான்ஷு சுக்லா மற்றும் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோர் இந்த பணிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் சுபான்ஷு சுக்லா முதன்மை விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
“ஆகஸ்ட் 23 அன்று முதல் தேசிய விண்வெளி தினத்தில் சந்திரயான் -3 விண்கலத்தால் சேகரிக்கப்பட்ட அறிவியல் தரவுகள் வெளியிடப்படும். நாடு முழுவதும் 1,000 நிகழ்வுகள் மூலம் இந்த நாள் கொண்டாடப்படும். சந்திரயான் -5 திட்டம், ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (JAXA) மற்றும் பிற விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இந்த திட்டம் சந்திரனின் துருவப் பகுதிகளை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தும்.” என்ற அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டார்.