இந்தியன் வங்கியின் நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வங்கியின் லாபத்தில் 55% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், இந்தியன் வங்கியின் லாபம் 2247 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், வங்கிக்கு வட்டி மூலமாக கிடைத்த நிகர வருவாய் 9% உயர்ந்து, 6015 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கியின் வாராக்கடன் அளவு 200 புள்ளிகள் சரிந்து 3.95% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியின் சி ஏ ஆர் 16.44% ஆக சொல்லப்பட்டுள்ளது. இறுதியாக, இந்தியன் வங்கியின் ஒரு பொது பங்குக்கு 12 ரூபாய் டிவிடெண்ட் வழங்கிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர். நேற்று வெளியான காலாண்டு அறிக்கைக்குப் பிறகு, இன்றைய வர்த்தக நாளில், இந்தியன் வங்கி பங்குகள் 1.93% வீழ்ச்சியடைந்துள்ளன.