சான்பிரான்சிஸ்கோ தொங்கு பாலத்தில் இந்திய சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கோல்டன் கேட் என்ற பிரசித்தி பெற்ற தொங்கு பாலம் உள்ளது. அந்த நகரத்தின் அடையாள சின்னமாக திகழும் இந்த தொங்குபாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாலம் திறக்கப்பட்ட 1937ம் ஆண்டில் இருந்து இதுவரை 2 ஆயிரம் பேர் வரை தங்கள் உயிரை மாய்த்து உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 25 பேர் வரை உயிர் இழந்து உள்ளனர்.
இந்த நிலையில் 16 வயதான அமெரிக்காவை சேர்ந்த இந்திய சிறுவன் நேற்று இந்த தொங்கு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். அவரது சைக்கிள் மற்றும் செல்போன், கைப்பை ஆகியவை பாலத்தில் கிடந்தது. இதையடுத்து கடலோர படையினர் அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.