இந்தியா மற்றும் கனடா இடையே ஆழமான வர்த்தக உறவு உள்ளது. இந்நிலையில், இருநாட்டு வர்த்தகம் குறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் கனடா நாட்டு வர்த்தகத் துறை அதிகாரிகளால் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய நிறுவனங்கள் கனடாவில் 6.6 பில்லியன் கனடா டாலர்கள் மதிப்பில் முதலீடுகளை செய்துள்ளன. இதன் மூலம், கனடாவில் 17,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
'ஃப்ரம் இந்தியா டு கனடா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த அறிக்கையை, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் கனடாவின் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் மேரி ஆகியோர் வெளியிட்டனர். அரசு முறைப் பயணமாக கனடா சென்றுள்ள பியூஷ் கோயல், "இந்த அறிக்கை இருநாட்டு வர்த்தக உறவை எடுத்துரைக்கிறது. கனடா மற்றும் இந்தியாவை ஒன்றிணைத்து, இரு நாடுகளுக்கும் லாபகரமான பாதையை காட்டும் ஒன்றாக வர்த்தகம் உள்ளது" என்று கூறினார். இரு நாடுகளும் இணைந்து அனுபவிக்கும் பயன்கள் குறித்து கனடா அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.