அமெரிக்காவில் மருத்துவம் பயின்று வரும் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் சின்சினாட்டி மருத்துவப் பல்கலைக்கழகத்தில், ஆதித்யா அத்லக்கா என்ற 26 வயது இந்திய மாணவர் 4ம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்துள்ளார். அவர், கடந்த 9ம் தேதி காருக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினருக்கு, காருக்குள் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும், விரைந்து சென்ற காவல்துறையினர், ஆதித்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. மாணவரின் குடும்பத்தினருக்கு பல்கலைக்கழகம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.