பண்டிட் தீனதயாள் எரிசக்தி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு பேசினார். அப்போது, வரும் 2047 ஆம் ஆண்டு, இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 40 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 3 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும் நிலையில், 2047க்குள், 13 மடங்கு அதிகரித்து, 40 டிரில்லியனை எட்டும் என்று அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும், உலக அரங்கில், வளர்ந்த நாடுகள் பட்டியலில், இந்தியா முதல் மூன்று இடங்களில் இருக்கும் என தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனியைத் தொடர்ந்து, ஐந்தாம் இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இனி வரும் காலங்களில், எரிசக்தி, பயோ எனர்ஜி மற்றும் டிஜிட்டல் துறைகளில் இந்தியா அபார வளர்ச்சியை எட்டும் என்று அவர் கூறினார்.