இந்திய கலாசாரத்தில் முக்கியத்துவம் பெற்ற இசைக்கருவிகளின் இனிமையான ஒலிகளை கொண்ட ஹாரன்களை வழக்கில் கொண்டு வருவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.
இந்திய சாலைகளில் ஹாரன்களின் அதிகமான ஒலி மாசு நாளுக்குநாள் பெருக்கி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு புதிய நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்த புதிய முயற்சி குறித்து உரையாற்றினார்.
அவர் கூறியதாவது:
"தற்போது வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹாரன்கள் மிகுந்த சத்தத்துடன் இருக்கின்றன. அவை பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக, இந்திய கலாசாரத்தில் முக்கியத்துவம் பெற்ற இசைக்கருவிகளின் இனிமையான ஒலிகளை கொண்ட ஹாரன்களை வழக்கில் கொண்டு வருவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.
புதிய விதிமுறைகள் அமலாகும் போது, அனைத்து வாகனங்களிலும் புல்லாங்குழல், தபலா, வயலின், ஹார்மோனியம் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளின் ஒலிகள் அடங்கிய ஹாரன்கள் கட்டாயமாக்கப்படலாம்.