இந்திய கடற்படை இந்திய பெருங்கடல் பகுதியில் சிறைப்பிடித்துச் சென்ற ஈரானிய கப்பலில் இருந்த 17 ஈரானியர்களை பத்திரமாக மீட்டனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்களை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த செயல்களில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கொண்டு சோமாலிய கடற்கொள்ளையர்களும் கப்பல்களை கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்திய கடற்படையினர் போர்க்கப்பல்கள் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்திய பெருங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இதில் கிழக்கு சோமாலியாவின் ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று ஈரானை சேர்ந்த 17 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடற்கொள்ளையர்கள் அந்த கப்பலை கடத்தினர். இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ் சுமித்ரா மீன்பிடி கப்பலில் இருந்த பணியாளர்களை பத்திரமாக மீட்டனர் .மேலும் இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கொடியுடன் பறந்த அல் அமீம் என்ற கப்பலையும், கப்பலில் இருந்த 19 ஊழியர்களையும் பத்திரமாக மீட்டனர்.