இந்திய கடற்படை, ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, தரையிலிருந்து விண்ணில் ஏவப்படும் ஏவுகணை ஆகும். இன்று நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பான டி ஆர் டி ஓ இந்த ஏவுகணையை வடிவமைத்துள்ளது. பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் மற்றும் ஐஏஐ ஆகியவையும் இந்த ஏவுகணை வடிவமைப்பில் பங்களிப்பை வழங்கி உள்ளன. ‘இந்த ஏவுகணை சோதனையின் வெற்றி, தற்சார்பு இந்தியாவின் முக்கிய மைல்கல்’ என்று ட்விட்டர் வாயிலாக இந்திய கடற்படை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.