கடந்த பிப்ரவரி மாதம், உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்காவை அமெரிக்கா முன்மொழிந்தது. தற்போது, தலைவர் பதவிக்கான மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், வேறு யாரும் போட்டியிடாததால், ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்ட அஜய் பங்கா, உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
63 வயது ஆகும் அஜய் பங்கா, மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 11 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இது தவிர, பல சர்வதேச நிறுவனங்களை வழிநடத்திய அனுபவம் கொண்டவர் ஆவார். இந்தியாவில் பயின்ற இவர், அமெரிக்க குடியுரிமை பெற்று, பல நிறுவனங்களுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அத்துடன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வர்த்தகக் கொள்கை ஆலோசனை குழுவில் அவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், உலக வங்கியின் தலைவராக பதவி ஏற்பது வரலாற்று நிகழ்வாக சொல்லப்படுகிறது. இதுவரை அமெரிக்கர்கள் மட்டுமே தலைமை பொறுப்பை வகித்து வந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தலைவராவது முதல் முறையாகும்.