கனடா நாட்டில் ஒன்டோரியோ மாகாணத்தில் இந்திய வம்சாவளி குடும்பத்தினர் வீடு தீப்பற்றி எரிந்ததில் மரணம் அடைந்தனர்.
கனடா நாட்டின் ஒன்டோரியோ மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜீவ் வாரிகோ என்பவர் வசித்து வந்தார். இவருடன் இவரது மனைவி ஷில்பா மற்றும் மகள் வாரிகோ வாழ்ந்து வந்தனர். இவர்கள் பிராம்டனில் உள்ள பிஸ்க்கைவே அண்ட் வான்கிரிக் டிரைவ் எனும் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி இவர்கள் வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எறிந்தது. தகவல் அறிந்து போலீசார் அந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்களுடன் சென்றனர். அவர்கள் வீட்டில் தீயை அணைத்தனர். அப்போது அங்கு மூவரும் தீயில் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கு காரணம் குறித்து தகவல் எதுவும் இல்லை. தீ எவ்வாறு பிடித்தது என்பது சந்தேகமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். எனவே சந்தேகத்திற்கு இடமான சம்பவம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அதோடு வீட்டில் தற்செயலாக தீப்பிடிக்கவில்லை என்று உயர் அதிகாரிகள் கருதியதால் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீட்டில் தீ விபத்து ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் இதனால் இதை கொலை வழக்கு போன்று விசாரிப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
இறந்துபோன ராஜீவ் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர் என்று அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.














