அமெரிக்காவில் இந்திய டாக்டர் ரமேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ் பாபு பெரம்செட்டி, குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடியேறி, அலபமா மாகாணத்தில் பிரபல மருத்துவராக இருந்தார். இவர் அவசர சிகிச்சை மற்றும் குடும்ப மருத்துவத்தில் 38 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்டவர். மேலும், பல நலத்திட்டங்களை முன்னெடுத்து பலரின் உயிரை காப்பாற்றி சேவை செய்துள்ளார். ஆனால், இவர் அடையாளம் தெரியாத நபர்களால் டஸ்கலூசா நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான காரணத்தைப் பற்றி போலீசார் விசாரணை செய்கின்றனர்.