ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்

September 5, 2022

ஸ்டார்பக்ஸ் காபி ஜெயன்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார். 55 வயதான லக்ஷ்மன் நரசிம்மன் இதற்கு முன் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான ரெக்கிட் பென்கிசரில் சிஇஓவாக பதவிவகித்தார். 2022, அக்டோபர் 1 ம்தேதி ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் சிஇஓவாக பதவியேற்க உள்ளார். அதுவரை ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் இடைக்கால சிஇஓவாக தற்போது உள்ள ஹோவர்ட் ஸ்கல்ட்ஸ் தொடர்வார் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டார்பக்ஸ்-ன் நிர்வாகக் குழு இயக்குநர் […]

ஸ்டார்பக்ஸ் காபி ஜெயன்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

55 வயதான லக்ஷ்மன் நரசிம்மன் இதற்கு முன் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான ரெக்கிட் பென்கிசரில் சிஇஓவாக பதவிவகித்தார். 2022, அக்டோபர் 1 ம்தேதி ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் சிஇஓவாக பதவியேற்க உள்ளார். அதுவரை ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் இடைக்கால சிஇஓவாக தற்போது உள்ள ஹோவர்ட் ஸ்கல்ட்ஸ் தொடர்வார் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டார்பக்ஸ்-ன் நிர்வாகக் குழு இயக்குநர் மெலோடி ஹாப்ஸன் ௯றியதாவது “லகஷ்மன் நரசிம்மரின் ஆழ்ந்த அனுபவம், சர்வதேச வாடிக்கையாளர்களை எவ்வாறு கையாள்வது என்பதற்கு உதவியாக இருக்கும். மேலும் நிறுவனத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல சரியான வாய்ப்பாக அமையும்” எனக் ௯றியுள்ளார். இதற்கு முன் நரசிம்மன் பெப்சி அன்ட் கோ நிறுவனத்தில் சர்வதேச வர்த்தக அதிகாரியாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி பெப்சி நிறுவனத்தின் லத்தின் அமெரிக்கா, ஐரோப்பா, சஹாரா ஆப்பிரிக்காவுக்கு தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன் மெக்கின்ஸி அன்ட் கம்பெனியில் மூத்த ஆலோசனை அதிகாரியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu