அமெரிக்காவில் காவல்துறையினரால் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சான் அன்டோனியோ நகரில் வசித்து வந்த சச்சின் சாகு என்ற இந்தியர், தன்னுடன் தங்கி இருந்த பெண்ணை தாக்கி, அவர் மீது கார் ஏற்றி உள்ளார். பலத்த காயம் அடைந்த அந்தப் பெண்ணை மீட்ட காவல்துறையினர், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சச்சின் சாகுவை கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது காவல்துறை அதிகாரிகளிடமிருந்து தப்ப முயன்ற சச்சின் சாகு, தனது காரை ஏற்றி 2 காவல் அதிகாரிகளை காயமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிகாரிகள் அவரை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சச்சின் சாகுவுக்கு மன நோய் இருப்பதாக அவரது முன்னாள் மனைவி கூறியதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.