ரிஷிசுனக் பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வானதையடுத்து அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். அதுமட்டுமின்றி வரலாற்றில் முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் லண்டன் பிரதமராக பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வென்று கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் போரிஸ்ஜான்சன் பிரதமராகப் பதவியேற்றார். பின்னர் கோவிட் காலத்தில் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து லிஸ்ட்ரஸ் பிரிட்டனின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அவ௫ம் சில அரசியல் காரணங்களால் பதவி விலகினார். இதனையடுத்து கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் போரிஸ்ஜான்சன் மற்றும் ரிஷிசுனக் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் போரிஸ்ஜான்சன் வேட்பு மனுதாக்கல் செய்யாமல் போட்டியில் இ௫ந்து விலகினார். அதையடுத்து ரிஷிசுனக் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், இங்கிலாந்தின் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டார்.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஒரு இந்தியக் குடும்பத்தில் ரிஷி சுனக் பிறந்தார். அவருடைய தாய் ஒரு மருந்தாளுனர் ஆவார். இவருடைய தந்தை தேசிய சுகாதார சேவையில் பணி புரிந்தவர். 42 வயதான ரிஷிசுனக் இங்கிலாந்தின் இளம் பிரதமர் எனும் பெ௫மையை அடைகிறார். மேலும் பிரிட்டன் மன்னர் 3ம்சார்லஸ் ரிஷிசுனக்கை பிரதமராக நியமித்த பின் அதிகாரபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிபடிப்பை முடித்த சுனக், ஆக்ஸ்போர்டு & ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ரிஷிசுனக் கர்நாடகாவைச் சேர்ந்த இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தின் மகளான அக்சதா மூர்த்தியை தி௫மணம் செய்தார்.
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ், இங்கிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்தார்.