நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகினர்.
நேபாளத்தில், பொக்காரா முதல் காத்மாண்டு நோக்கி பயணிக்கும் பேருந்து தனாஹூன் மாவட்டத்தில் மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகிலுள்ள சாலையில் விபத்துக்குள்ளானது. பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் பயணிகள் தண்ணீரில் மூழ்கினர். மீட்புப் பணியில் 16 பேர் மீட்கப்பட்டு, 14 பேர் சடலமாகக் கிடைக்கப்பெற்றனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியர்களா என்பதற்கான தகவல் இன்னும் கிடைக்கவில்லை.