ஐநா விருதை வென்றார் இந்திய ராணுவ வீராங்கனை மேஜர் ராதிகா சென்

May 29, 2024

ஒவ்வொரு ஆண்டும் மே 30ஆம் தேதி அமைதி காக்கும் வீரர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை இந்த தினத்தில் வீரர்களுக்கு விருது வழங்குகிறது. அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருது இந்திய ராணுவ வீராங்கனை ராதிகா சென்னுக்கு வழங்கப்படுகிறது. ஐநா சபையின் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் இந்த விருதை வழங்குகிறார். மேஜர் ராதிகா சென், காங்கோ ஜனநாயக குடியரசில் ஐநா சபையின் அமைதி காக்கும் ஊழியராக […]

ஒவ்வொரு ஆண்டும் மே 30ஆம் தேதி அமைதி காக்கும் வீரர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை இந்த தினத்தில் வீரர்களுக்கு விருது வழங்குகிறது. அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருது இந்திய ராணுவ வீராங்கனை ராதிகா சென்னுக்கு வழங்கப்படுகிறது. ஐநா சபையின் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் இந்த விருதை வழங்குகிறார்.

மேஜர் ராதிகா சென், காங்கோ ஜனநாயக குடியரசில் ஐநா சபையின் அமைதி காக்கும் ஊழியராக பணியாற்றினார். கடந்த 2023 மார்ச் முதல் 2024 ஏப்ரல் வரை அவர் பணியில் இருந்தார். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் வீரர்களுக்கு இந்த விருது மிகப்பெரிய நம்பிக்கை என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, மேஜர் சுமன் கவாணி இந்தியா சார்பில் இந்த விருதை பெற்றுள்ளார். அதன்படி, இந்த விருதை பெரும் 2 வது வீரராக ராதிகா சென் உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu